சேலைகட்டிய இடைவெளியில்
உன் இடை தெரிய
ஓரக்கண்ணால் உற்றுப்பார்த்தேன்
குடந்தூக்கும் இடை இதுதானா
தண்ணியில்லா
வெற்றுக்குடத்தின் சுமயைக்கூட
இந்த இடை தாங்காதே..!!
சேலையை அள்ளி செருகும்போது
மெதுவாக செருகு
அழுத்தம் கொடுத்தால்
அதையும் தாங்காது உன் மெல்லிடை..!!
உன்னிடையோ தாமரைக்கொடி
அந்தக்கொடிக்கு மேல் இரண்டு
தாமரை பூத்ததோ..!!
நீ சூடிய மல்லிகைச்சரம்
தாமரைக்கொடியை
தட்டி தட்டி பார்த்தது
என் கண்களதை
எட்டி எட்டி பார்த்தது..!!
வருக... வருக... வலைப்பதிவுலகம் சந்தக்கவியை அன்புடன் வரவேற்கிறது!!
ReplyDeleteமெல்லுடையைத் தாங்காத மெல்லிடை!! அருமையான கற்பனை!!
ReplyDeleteஎன்னைக் கைகொடுத்து வரவேற்கும்கவிஜோதி. வைகறை அவர்களுக்கு நன்றி.
ReplyDelete